Saturday, July 7, 2012


பள்ளிகளில் சிறப்பு பாதுகாப்புப்படை

"மாணவர்களின் நலன் காக்க, சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி அறிவுறுத்தியுள்ளார்.

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில் மாணவர்கள் நலன் பாதுகாக்க, உடற்கல்வி ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சாரண மற்றும் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள் உள்ளடக்கிய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேணடும்.

போலீஸ், போக்குவரத்து , தீயணைப்பு , சுகாதாரத்துறை மூலம், சிறப்பு பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களிடையே அச்ச உணர்வு நீக்க வேண்டும்.

இதை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி, பாதுகாப்பு படை அமைக்க வேண்டும். பாதுகாப்பு படை நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளா

தேவையை விட அதிகம் உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியருக்கு பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு


 தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகளின் தேவையை விட கூடுதலாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் கலந்தாய்வு, 13ம் தேதி முதல் நடக்கிறது.


        இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும்; 6, 7, 8 ஆகிய வகுப்புகளில், 35 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற வீதத்திலும் இருக்க வேண்டும். ஆகையால், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறித்து, விவரம் சேகரிக்கப் பட்டது. 
        அதன் அடிப்படையில், தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுவதற்காக, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 13ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரையும்; தொடக்கக் கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியருக்கு, 21ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரையும், பணி நிரவல் (கூடுதல் ஆசிரியர் பணியிட மாற்றம்) மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத தற்காலிக 4748 பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு